இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை தற்போதுள்ள 14 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்துவதற்கான தீர்மானத்தை மத்தியப் பிரதேச அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.
மேலும் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டுடன் சேர்த்து ஒட்டுமொத்த ஒதுக்கீடானது 73 சதவீதமாக உள்ளது.
இது இட ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறுவதாகவும் இந்திய அரசுக்கு எதிரான இந்திரா சவ்ஹானி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிரானதும் ஆகும்.