TNPSC Thervupettagam

OBC ஒதுக்கீட்டினை மறுசீரமைத்தல்

July 24 , 2022 728 days 349 0
  • மகாராஷ்டிர மாநில அரசானது, ஜெயந்த் குமார் பாந்தியா தலைமையிலான 6 பேர் கொண்ட ஒரு ஆணையத்தினை அமைத்தது.
  • இந்தக் குழு தனது அறிக்கையைச் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
  • மகாராஷ்டிராவின் உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்த அறிக்கை வழி வகுத்துள்ளது.
  • உள்ளாட்சி அமைப்புகளில் 27% இட ஒதுக்கீடு வழங்க இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது
  • இருப்பினும், இந்த இடஒதுக்கீடானது, பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான சட்ட ரீதியான இட ஒதுக்கீட்டைப் பாதிக்கக் கூடாது.
  • மேலும் இது 50% இட ஒதுக்கீடு என்ற வரம்பிற்கு உட்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்