இந்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் சட்டமுறை அளவியல் பிரிவானது, சர்வதேச சட்டமுறை அளவியல் அமைப்பின் (OIML) சான்றிதழ் வழங்கும் ஆணையமாக நியமிக்கப்பட்டுள்ளது.
OIML என்பது சர்வதேச சட்டமுறை அளவியல் அமைப்பாகும்.
1955 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அமைப்பு பாரீஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
OIML என்பது ஒரு சர்வதேச தரநிலை நிர்ணய அமைப்பாகும்.
இது சட்டமுறை அளவியல் அதிகாரிகள் மற்றும் தொழில்துறையினரின் பயன்பாட்டிற்காக மாதிரி விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை உருவாக்குகிறது.
இந்தியா 1956 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் உறுப்பினரானது.
அதே ஆண்டில், இந்தியா அளவைகள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
இதுவரை 13 நாடுகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், அண்டை நாடுகளும் உற்பத்தியாளர்களும் தங்கள் சான்றிதழைப் பெற இந்தியாவினை நாடலாம்.