உச்ச நீதிமன்றமானது வாக்களிப்பிற்குப் பணப் பட்டுவாடா செய்யப்படும் வழக்குகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கும் 1998 ஆம் ஆண்டு தீர்ப்பினை மறுபரிசீலனை செய்வதற்காக ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குச் சமீபத்தில் பரிந்துரைத்தது.
அந்தத் தீர்ப்பானது சட்டமியற்றும் உறுப்பினர்களுக்கு அவர்களின் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான லஞ்சக் குற்றச்சாட்டுகளுக்கான குற்றவியல் வழக்குகளிலிருந்து விலக்கு அளித்தது.
1993 JMM லஞ்ச வழக்கில் இருந்து உருவான P. V. நரசிம்ம ராவ் வழக்கில், சட்டமியற்றும் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வாக்களிப்பினை ஊக்குவிக்கச் செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
உச்ச நீதிமன்றம் ஆனது அந்த வழக்கில் 105(2)வது சட்டப் பிரிவின் கீழ் சட்டமியற்றும் உறுப்பினர்களுக்கு விலக்கு அளித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு, மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு வாக்கு அளிப்பதற்கு லஞ்சம் பெற்றதாக சீதா சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர் இதிலிருந்து விலக்கு பெறுவதற்காக 194(2)வது சட்டப் பிரிவினைப் பயன்படுத்த முன்மொழிந்தார், ஆனால் உயர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்து, பின் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.