பிரதான் மந்திரி இராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) விருதானது, மகத்தான திறன்கள் மற்றும் சிறந்த சாதனைகள் படைத்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
5 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஏழு பிரிவுகளில் அவர்களின் சிறந்த சாதனைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான வீரம், கலை & கலாச்சாரம், சுற்றுச்சூழல், புத்தாக்கம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய 7 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.