TNPSC Thervupettagam

PM-JAY திட்டத்தின் கீழ் 5 கோடி மருத்துவமனைச் சேர்க்கைகள்

June 6 , 2023 413 days 220 0
  • ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா (AB PM-JAY), திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியாக பதிவு செய்யப் பட்டுள்ளது.
  • 2022-23 ஆம் நிதியாண்டில் மொத்த சேர்க்கைகளில் 56% தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 44% அரசுப் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
  • தேசிய சுகாதார ஆணையத்தினால் (NHA) நிர்வகிக்கப்படும் இந்தத் திட்டமானது, ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் வரையிலான ஒரு சுகாதாரக் காப்பீட்டினை வழங்குகிறது.
  • இது சுமார் 12 கோடி குடும்பங்களுக்கு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவச் சிகிச்சைக்கான அணுகலை வழங்குகிறது.
  • தற்போது, இந்தத் திட்டமானது டெல்லி, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை தவிர இந்தியாவின் 33 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அமலில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்