மாற்று வகை உரங்களை ஊக்குவிக்கவும், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கவும் மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில் PM-PRANAM என்ற ஒரு புதியத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
PM-PRANAM, தங்க யூரியா மற்றும் இயற்கை உரத்திற்கான மானியம் உள்ளிட்டவை அரசாங்கத்தின் நிலையான விவசாயத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றது.
இந்த முயற்சியில் மண் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய PM-PRANAM திட்டம் மற்றும் சல்பர் பூசப்பட்ட யூரியா (யூரியா தங்கம்) அறிமுகம் ஆகியவை அடங்கும்.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 242 ருபாய் நிலையான விலையில் 45 கிலோ உர மூட்டையானது கிடைப்பதை இது உறுதி செய்கிறது (வரிகள் மற்றும் வேம்புப் பூச்சு கட்டணங்கள் தவிர்த்து).
இந்த காலக்கட்டத்தில் யூரியா மானியத்திற்கான மொத்த செலவு ரூ.3.68 லட்சம் கோடி ருபாய் ஆகும்.