பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு 81 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்திற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தானியங்களின் அணுகல், அவற்றின் மலிவான விலை மற்றும் அவை சுலபமாக கிடைக்கப் பெற செய்தல் ஆகியவற்றினை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
PMGKAY திட்டமானது, பெருந்தொற்றினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்காக முதலில் 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் மானிய விலையில் வழங்கப்படும் உணவு தானியத்துடன் சேர்த்து, ஒரு பயனாளிக்கு மாதம் 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, PMGKAY திட்டமானது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு வருடத்திற்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்குகிறது.
PMGKAY திட்டத்தின் கீழ் அந்தியோதயா குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்குவதற்கான பொருளாதாரச் செலவை மத்திய அரசே ஏற்கிறது.