இத்திட்டம், அறுவடைக்குப் பிந்தைய காலகட்டத்தில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு தங்கள் விளைபொருட்களைத் பாதுகாத்து தக்க வைத்துக் கொள்வதற்காக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது அவர்களின் பயிர்களை எப்போது, எங்கு விற்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கான சுய அதிகாரத்தினை அவர்களுக்கு வழங்குகிறது.
இது பயிர்களுக்கான விலையினை நிர்ணயம் செய்வதில் வியாபாரிகளின் ஏகாதிபத்தியத்தினை உடைக்க முயல்வதோடு, விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களின் மீது அதிக கட்டுப்பாட்டை அளிக்கிறது.
சேமிப்பு ஊக்கத் தொகையானது, அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு வழங்கப் படும்.
அதோடு, 15 நாட்கள் அல்லது அதற்கும் குறைவாக சேமித்து வைக்கப்படும் விளைபொருட்கள் மானியம் பெற தகுதியற்றது.
ஆந்திரப் பிரதேசம், அசாம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.