TNPSC Thervupettagam
May 3 , 2020 1542 days 715 0
  • ஐஐடி – தில்லியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் கோவிட் – 19 பரவலைக் கணிப்பதற்காக இணைய வழியில் இயங்கும் ஒரு  முகப்புப் பலகையை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த முகப்புப் பலகையானது “PRACRITI – இந்தியாவில்  கொரானா நோய்த் தொற்று மற்றும் பரவலின் கணிப்பு & மதிப்பீடு” (Prediction and Assessment of Corona Infections and Transmissions in India) என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த முகப்புப் பலகையானது அடிப்படை மறு உருவாக்க எண்ணான “R இன்மை” (R naught) என்பதனை அளிக்கின்றது.
  • R0 என்பது இந்த வைரஸானது ஒரு நபரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவியுள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது.
  • இந்த முகப்புப் பலகையானது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றிடம் இருக்கும் தரவின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாநிலத்திற்கும் RO மதிப்பினை அளிக்கின்றது. 
  • எனவே RO-வின் உதவியுடன், நோய்ப் பரவலின் எதிர்காலக் கணிப்புகளைப் பெற முடியும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்