பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் கல்வி கழகத்தில் பல தசாப்தங்களாக வானியலாளராக பணியாற்றிய பேராசிரியர் R. ராஜமோகன் காலமானார்.
இவர் சுதந்திர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது குறுங்கோள் கண்டுபிடிப்பினை மேற்கொண்டவர் ஆவார்.
இவர் தனது கல்கி திட்டத்திற்காக பிரபலமாக அறியப்படுகிறார்.
காவலூர் வைனு பப்பு ஆய்வகத்தில் உள்ள 48 செமீ ஷ்மிட் தொலைநோக்கியைப் பயன்படுத்தி குறுங்கோள்களைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டமானது இந்தியா சார்பில் 4130 என்ற புதிய குறுங்கோளைக் கண்டுபிடித்தது.
104 ஆண்டுகளில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் குறுங்கோள் இதுவாகும்.