TNPSC Thervupettagam

RBIயிலிருந்து 1.76 இலட்சம் கோடி நிதி மத்திய அரசிற்கு மாற்றம்

August 27 , 2019 1790 days 590 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India - RBI) ஆளுநரான சக்திகாந்த தாஸ் தலைமையிலான RBI வாரியமானது தன்னிடம் உள்ள ஈவுத் தொகை மற்றும் உபரி நிதியான 1.76 டிரில்லியனை மத்திய அரசிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.
  • “உபரி நதியை மத்திய அரசிற்கு வழங்கலாம்” என்ற RBIயின் முன்னாள் ஆளுநரான பிமல் ஜலன் தலைமையிலான ஒரு உயர்நிலைக் குழுவின் பரிந்துரையை RBI வாரியம் ஏற்றுக் கொண்ட பின்பு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ரிசர்வ் வங்கி இதுவரை வழங்கியுள்ள மிக உயர்ந்த தொகை ரு.65,896 கோடியாகும் (2014-15 ஆம் ஆண்டில்).
  • இந்த மாற்றமானது
    • பொருளாதாரத்திற்கு ஒரு  நிதி ஊக்கமாகச்  செயல்படும்.
    • நிதிப் பற்றாக்குறை இலக்கை எதிர் கொள்ள அரசிற்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்