சீனா மற்றும் இதர 14 நாடுகள் இணைந்து உலகின் மிகப்பெரிய வர்த்தகத் தொகுதியை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த 15 நாடுகளும் உலக மக்கள் தொகையில் 30% அளவினையும் உலகின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 30% என்ற அளவினையும் கொண்டுள்ளன.
உலகின் மிகப்பெரிய வர்த்தகத் தடையற்ற ஒப்பந்தம் இதுவாகும்.
சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை இருதரப்பு வரி (கட்டணம்) குறைப்பு ஏற்பாட்டை அடைவது இதுவே முதன்முறையாகும்.
மேலும், சீனா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை ஒரே வர்த்தகத் தடையற்ற ஒப்பந்தத்தில் ஒன்றிணைவது இதுவே முதன்முறையாகும்.
இந்த ஒப்பந்தமானது சுங்கக் கட்டணத்தை மேலும் குறைக்கவுள்ளது.
மேலும் இது டிரான்ஸ்-பசிபிக் வர்த்தகத்தை விட குறைந்த அளவு விரிவாக்கம் கொண்டதாகும்.
டிரான்ஸ் பசிபிக் பங்களிப்பிற்கான விரிவான மற்றும் செயல்பாட்டு ஒப்பந்தம் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership - CPTPP) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றைப் போல் அல்லாமல், இது தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது தரங்களை நிர்ணயிக்கவில்லை.
CPTPP ஆனது சிலியில் 2018 ஆம் ஆண்டில் கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, வியட்நாம், சிங்கப்பூர், பெரு, நியூசிலாந்து, மலேசியா, சிலி, புருனே ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தானது.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவானது சீனாவின் உற்பத்திப் பொருட்கள் இந்தியாவில் குவிக்கப் படும் என்ற காரணத்தினால் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது.