இந்தியாவில் முதன்முதலாக கொல்கத்தா மாநகராட்சி உயர்நிலைத் தலைகீழ் படியெடுத்தல்-பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (Reverse Transcription-Polymerase Chain Reaction - RT-PCR) இயந்திரங்களை நிறுவியுள்ளது.
டெங்கு, காசநோய் மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களை விரைவாகக் கண்டறிய இவை பயன்படுத்தப்படும்.
மருத்துவ அறிக்கைகள் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் முரண்பாடான முடிவுகளை வெளிப்படுத்தும் சூழ்நிலைகளில் இந்த இயந்திரங்கள் ஒரு ‘மூன்றாம் நடுவராகப்’ பணியாற்றும்.
நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டறிய இரத்தப் பரிசோதனைகள் குறித்த துல்லியமான மரபணு ஆய்வு அறிக்கையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.