வரலாற்று ஆசிரியரும் நூலாசிரியருமான விக்ரம் சம்பத் என்பவர் வீர் சாவர்க்கர் அவர்களின் வாழ்வு மற்றும் சேவைகள் குறித்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகத்திற்கு “Savarkar : A Contested Legacy (1924 – 1960)”எனப் பெயரிடப் பட்டு உள்ளது.
இந்தப் புத்தகத்தினை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா எனும் பதிப்பகமானது வெளியிட உள்ளது.
“Savarkar : Echoes from a Forgotten Past” எனும் முதல் பாகமானது 2019 ஆம் ஆண்டில் வெளியானது.
இது 1883 ஆம் ஆண்டில் அவர் பிறந்தது முதல் 1924 ஆம் ஆண்டில் சிறையிலிருந்து நிபந்தனை விடுதலை பெற்றது வரையிலான சாவர்க்கர் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கூறுகிறது.
இரண்டாம் பாகமானது 1924 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரையிலான (இறந்த ஆண்டு) விநாயக் தாமோதர் சாவர்க்கர் அவர்களின் வாழ்வு மற்றும் சேவைகளைப் பற்றி வெளிக் கொணரும்.