TNPSC Thervupettagam
May 19 , 2018 2254 days 748 0
  • தெற்காசிய வனவிலங்கு அமலாக்கக் குழுவின் (SAWEN) நான்காவது கூட்டம், மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் நடைபெற்றது. இது அரசுகளுக்கிடையேயான வனவிலங்கு சட்டத்தை அமலாக்கம் செய்யும் அமைப்பு ஆகும்.
  • 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் முதல் கூட்டம் இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
  • இரண்டு நாள் நடைபெற்ற இம்மாநாட்டில், ஏழுநாடுகளின் (பாகிஸ்தானைத் தவிர) பிரதிநிதிகள் பங்கேற்றனர். இவ்வமைப்பு எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

  • இவ்வமைப்பானது, சட்டவிரோத வனவிலங்குகள் வர்த்தகத்தின் மீதான தெற்காசிய வல்லுநர்கள் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் பூடான் நாட்டின் பாரோ நகரில் 2011 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • இவ்வமைப்பின் செயலகம் நேபாள நாட்டின் தலைநகரமான காத்மாண்டுவில் உள்ளது. இதன் மண்டலக்குழு எட்டு தெற்காசிய நாடுகளைக் கொண்டது.
  1. ஆப்கானிஸ்தான்
  2. பாகிஸ்தான்
  3. இந்தியா
  4. நேபாளம்
  5. பூடான்
  6. வங்கதேசம்
  7. இலங்கை
  8. மாலத்தீவுகள்
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்