கர்நாடக மாநிலக் காவல்துறையானது 206 ‘Scene of crime’ (குற்றங்களின் போதான சாட்சி) அதிகாரிகளைப் பணியில் சேர்க்க உள்ளது.
இவர்கள் அந்த மாநிலத்தில் குற்றம் நடக்கும் இடங்களிலிருந்து முக்கியமான ஆதாரங்களை ஆய்வு செய்து சேகரிப்பார்கள்.
இந்த அதிகாரிகளுக்கு காந்திநகரில் உள்ள தேசியத் தடய அறிவியல் பல்கலைக் கழகம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள மத்தியத் தடய அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த அதிகாரிகளுக்காக வேண்டி ஒரு பிரத்தியேக ‘நடமாடும் தடயவியல் ஆய்வகத்தை’ ஏற்படுத்தவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இது கர்நாடக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் முதல் முறையாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
1961 ஆம் ஆண்டில் லண்டனில், இது போன்ற பதவி முதன்முதலில் உருவாக்கப்பட்டது.