ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO - Shanghai Cooperation Organization) வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பானது ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடத்தப் பட்டது.
8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள SCO அமைப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பில் இந்தியா முழு உறுப்பினராக கலந்து கொள்வது இது மூன்றாவது முறையாகும்.
SCO ஆனது ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிபர்களினால் 2001 ஆம் ஆண்டில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மாநாட்டில் தொடங்கப்பட்டது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் 2005 ஆம் ஆண்டில் இந்தக் குழுவில் பார்வையாளர்களாக சேர்க்கப்பட்டன.
இந்த 2 நாடுகளும் 2017 ஆம் ஆண்டில் இந்தக் குழுவில் முழு உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப் பட்டன.