2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட ஒற்றுமைக்கான சிலையானது SCO (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு - Shanghai Cooperation Organization) அமைப்பின் 8 அதிசயங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையானது சர்தார் வல்லபாய் படேலுக்கு ஒரு முக்கியமான நினைவுச் சின்னமாக இருந்து வருகின்றது.
சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்த தினத்தின் போது இந்த சிலையானது திறந்து வைக்கப்பட்டது.
இது உலகின் மிக உயரமான சிலையாகும்.
8 அதிசயங்கள்
இந்தியாவில் உள்ள ஒற்றுமைக்கான சிலை
சீனாவில் உள்ள டேமிங் அரண்மனை
தஜிகிஸ்தானில் உள்ள நவ்ரூஸ் அரண்மனை
பாகிஸ்தானில் இருக்கும் முகலாயர்களின் பாரம்பரியம்
கஜகஸ்தானில் உள்ள தம்கலி மலையிடுக்கு
உஸ்பெகிஸ்தானில் உள்ள போ-இ-கலான் வளாகம்
ரஷ்யாவில் உள்ள தங்க வளையம்
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள முகலாயர்களின் பாரம்பரியம்.