TNPSC Thervupettagam

SCO மன்றத்தின் அரசத் தலைவர்களின் 20வது மாநாடு

November 14 , 2020 1387 days 498 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள் இந்த மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்துரையாடினார்.
  • இந்த மாநாடானது ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் அவர்களால் தலைமை தாங்கப் பட்டது.
  • தற்பொழுது நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இந்த மாநாடானது ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்களால் கலந்து கொள்ளப் பட்டது.
  • இந்த மாநாட்டில் SCO (Shanghai Cooperation Organization) அமைப்பில் பார்வையாளராக உள்ள ஈரான், ஆப்கானிஸ்தான், மங்கோலியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
  • இந்த அமைப்பில் முழு உறுப்பினர் அந்தஸ்து பெற்ற பின்பு இந்தியா கலந்து கொள்ளும் 3வது மாநாடு இதுவாகும்.
  • இந்தியா 2017 ஆம் ஆண்டில் SCO அமைப்பின் முழு உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றது.
  • தற்போதைய SCO மாநாடானது மாஸ்கோ பிரகடனத்தை ஏற்றுக் கொண்டு நிறைவு பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்