ஹைதராபாத்தை சேர்ந்த தேசிய விலங்குகள் உயிரித் தொழில்நுட்ப நிறுவன (NIAB - National Institute of Animal Biotechnology) அறிவியலாளர் சோனு காந்தி SERB மகளிர் சிறப்பு விருதினைப் பெற்றுள்ளார்.
இவர் சமீபத்தில் முடக்குவாதம், இருதய நோய்கள் மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் (Japanese encephalitis) போன்ற நோய்களைக் கண்டறிவதற்கான ஒரு அதிதிறன் நானோ உபகரணத்தை வடிவமைத்துள்ளார்.
இந்த விருது அறிவியல் மற்றும் தொழில்நட்பத் துறையின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தினால் (SERB - Science and Engineering Research Board) தொடங்கப் பட்டது.
அறிவியல் மற்றும் பொறியியலில் சிறந்து விளங்கும் இளம் சாதனைப் பெண்மணிகளுக்கு இவ்விருது அங்கீகாரத்தையும் விருதினையும் வழங்குகிறது.