சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆனது பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC), இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு (திவ்யாங்ஜன்) உதவித் தொகை வழங்குகிறது.
பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான (SC) மிக இளம் சாதனையாளர்களின் உயர்கல்வி படிப்பிற்கான உதவித்தொகை (SHREYAS) திட்டம் என்பது ஒரு மத்திய அரசின் திட்டம் ஆகும்.
இது சமூக நீதி விவகாரங்கள் மற்றும் அதிகாரமளித்தல் துறையால் செயல்படுத்தப் படுகிறது என்பதோடு மேலும் இது 04 துணைத் திட்டங்களை உள்ளடக்கியது.
இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் மற்றவர்களுக்கான SHREYAS திட்டமானது இரண்டு துணைத் திட்டங்களை உள்ளடக்கியது.
இந்த இரண்டில், OBC பிரிவினருக்கான தேசியப் புத்தாய்வு மாணவர் திட்டம் மட்டுமே ஓர் உதவித் தொகைத் திட்டமாகும்.
மாற்றுத்திறனாளிகள் துறையானது, இளம் சாதனையாளர்களின் உயர் கல்விக்கான உதவித் தொகை (SHREYAS) என்ற பெயரிலான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத் தவில்லை.
இருப்பினும், இந்தத் துறையானது, ஆறு துணைத் திட்டங்களை உள்ளடக்கிய 'மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை (திவ்யாங்ஜன்)' என்ற ஒரு முதன்மைத் திட்டத்தை செயல்படுத்துகிறது.
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துத் திட்டங்களும் மத்திய அரசின் திட்டங்கள் ஆகும், எனவே, மாநிலங்கள்/மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
இந்தத் திட்டங்கள் ஆனது இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன என்பதால், எந்த மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் இந்தத் திட்டங்களின் கீழ் பயனடையலாம்.