இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (ISRO) விண்கல ஆய்வுப் பணிச் செயல் பாடுகள் பற்றிய சர்வதேச மாநாட்டினை (SMOPS-2023) ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்ரோ இந்த நிகழ்விற்காக என்று இத்தாலிய விண்வெளி நிறுவனம் மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வுக் கழகம் மற்றும் தொழில்துறைப் பங்குதாரர்களுடன் இணைந்து ஒத்துழைப்பினை மேற்கொண்டது.
இந்த மாநாட்டில், விண்வெளி சார் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில் துறை மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து, விண்வெளி ஆய்வுப் பணிச் செயல் பாடுகள் மற்றும் தரைக் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவற்றில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் மற்றும் தானியக்கமாக்கல் பற்றி விவாதிக்கப்பட்டது.