உணவு மற்றும் வேளாண் அமைப்பு, விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம், UNICEF, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து SOFI 2022 என்ற அறிக்கையினை வெளியிட்டுள்ளன.
SOFI என்பது "உலகில் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை" என்பதைக் குறிக்கிறது.
இந்தியாவில் அதிக ஊட்டச்சத்துக் குறைபாடு (மக்கள் தொகையில் சுமார் 16 சதவீதத்தினர்), வீணாக்குதல் (சுமார் 17 சதவீதத்தினர்), வளர்ச்சி குன்றிய நிலை (சுமார் 31 சதவீதத்தினர்) மற்றும் குறைந்த அளவில் பிரத்தியேகமாக தாய்ப்பால் மட்டுமே வழங்கும் நடைமுறை (58% மட்டுமே) உள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் பசி, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் அனைத்து வடிவங்களிலுமான ஊட்டச்சத்துக் குறைபாட்டினை முடிவுக்குக் கொண்டு வருதல் என்ற இலக்கிலிருந்து உலகம் மேலும் விலகிச் செல்கிறது.
2021 ஆம் ஆண்டில் 828 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினியால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.
உலகப் பொருளாதார மீட்சியைக் கருத்தில் கொண்டாலும் 2030 ஆம் ஆண்டளவில் 8 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டினி நிலையினை எதிர்கொள்வர்.
உணவுப் பாதுகாப்பின்மையில் நிலவும் பாலின இடைவெளியானது 2021 ஆம் ஆண்டில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
27.6 சதவீத ஆண்களுடன் ஒப்பிடுகையில், உலகில் 31.9 சதவீதப் பெண்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்.