TNPSC Thervupettagam
May 6 , 2021 1171 days 656 0
  • கான்பூர் மற்றும் ஹைதராபாதில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் அறிவியலாளர்கள் இந்தியாவில் கோவிட் பற்றிய தரவுகளைக் கணிப்பதற்காக, எளிதில் பாதிக்கப்படக் கூடிய, கண்டறியப்படாத, சோதிக்கப்பட்ட (நேர்மறை) மற்றும் நீக்கப்பட்ட அணுகுமுறை” (Susceptible, undetected, Tested (positive) and Removed Approach - (SUTRA) எனும் ஒரு மாதிரியைப் பயன்படுத்தியுள்ளனர்.
  • இந்த மாதிரியானது பெருந்தொற்றின் போக்கினைக் கணிப்பதற்காக மூன்று முக்கிய அளவுருக்களைப் பயன்படுத்துகிறது.
  • முதலாவது அளவுருவானது ஒரு நாளைக்கு எத்தனை நபர்கள் பாதிக்கப்படுகின்றனர் என கணக்கிடும் பீட்டா (அ) தொடர்பு வீதமாகும் (beta or contact rate).
  • இது தொற்று ஏற்பட்ட நபர்கள் தங்களது நோய்த் தொற்று காலங்களில் எத்தனை நபர்களுக்கு வைரஸைப் பரப்புகின்றனர் என்பதை அளவிடும் RO என்ற மதிப்புடன் தொடர்புடையதாகும்.
  • இரண்டாவது அளவருவானது பெருந்தொற்றினால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப் படுகின்றனர் என்பதை கணக்கிடும்எல்லை (reach)” என்பதாகும்.
  • மூன்றாவது அளவுருவானது கண்டறியப்பட்ட மற்றும் கண்டறியப்படாத தொற்றுகளுக்கிடைப்பட்ட விகிதமான எப்சிலான் (epsilon) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்