TNPSC Thervupettagam

SWIFT gpi உடனடி பணம் வழங்கும் வசதி

June 9 , 2021 1139 days 594 0
  • வெளிநாட்டுப் பங்குதாரர் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் சார்பாக இந்தியாவில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக பணம் அனுப்ப உதவும் ஒரு வசதியை வழங்குவதற்காக SWIFT என்ற நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தினைச்  செய்துள்ளதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
  • பயனாளிகள் இதன்மூலம் தமது வங்கிக் கணக்கில் உடனடியாகப் பணம் பெற இயலும்.
  • எல்லை கடந்த உள்நாட்டுப் பணப் பரிவர்த்தனைகளுக்காக SWIFT gpi எனும் உடனடி பணம் வழங்கும் ஒரு வசதியை வழங்குவதில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில்  முதல் வங்கியும், உலகளவில் இரண்டாவது வங்கியும் ஐசிஐசிஐ வங்கியே ஆகும்.
  • 2 லட்சம் வரையிலான தனிப்பட்ட பண வழங்கீடு ஆனது SWIFT gpi வசதி மூலம் அனுப்பப் படும்.
  • இது உடனடியாக செயல்படுத்தப்பட்டு இந்தியாவிலுள்ள எந்தவொரு வங்கியிலும் உள்ள பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
  • இது IMPS பிணையம் வாயிலாக செலுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்