TNPSC Thervupettagam
January 15 , 2024 186 days 264 0
  • தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையானது, தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றல் ஆதரவுத் (TEALS) திட்டத்தினை மேலும் சில பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
  • 10 அரசுப் பள்ளிகள், இரண்டு அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் இரண்டு தனியார் பள்ளிகள் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் உள்ள 14 பள்ளிகளில் இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.
  • தற்போது இத்திட்டம் ஆனது, 100 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
  • மாணவர்களுக்கு தற்போது HTML, C++, Python, விளையாட்டு நிரல் உருவாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைக் கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது, மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதற்காக ஆசிரியர்களுக்கு அதிகாரம் அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இதற்கான பாடத்திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளதோடு, அவை ஆசிரியர்களுக்கு இதற்கான இயங்கலை வழியான வகுப்புகளை நடத்தவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்