ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது (United Nations Education, Scientific and Cultural Organisation - UNESCO) அமைதிக்கான மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்துடன் (Mahatma Gandhi Institute of Education for Peace - MGIEP) இணைந்து TECH 2019ஐ நடத்தியுள்ளது.
கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றிற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக இந்த TECH கருத்தரங்கு நடத்தப்பட்டது.
TECH என்பது மனிதநேயத்திற்கான மாறிவரும் கல்விமுறைக் கருத்தரங்கு என்பதைக் குறிக்கின்றது.
இந்தக் கருத்தரங்கானது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒரு நிலையான வகையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘யுனெஸ்கோ MGIEPயின் நண்பர்கள்’ எனப்படும் நாடுகளைக் கொண்ட குழுவிலும் கவனம் செலுத்தியது.
இந்தக் கருத்தரங்கில் ‘டிஜிட்டல் கற்றலுக்கான வழிகாட்டுதல்கள்’ குறித்த “விசாகப் பட்டினம் பிரகடனத்தின்” மீதும் கவனம் செலுத்தப்பட்டது.