18வது சர்வதேசத் தொலை தொடர்பு மருத்துவ வசதி மாநாடானது கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்தியத் தொலைத்தொடர்பு மருத்துவ வசதி சமூக அமைப்பு மற்றும் கேரளா சாப்டர் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கின்றன.
இது சுகாதாரக் கட்டுப்பாட்டு அமைப்புகள், சுகாதார நிதி வழங்கும் ஆணையங்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கியத் தளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வின் முக்கிய கருத்துரு, ‘நிலையான தொலை தொடர்பு மருத்துவ வசதி மற்றும் எண்ணிம சுகாதார நல வசதிகள் மூலம் சுகாதார அமைப்புகளை வலுப் படுத்துதல்’ என்பதாகும்.