TNPSC Thervupettagam

TIME100 இதழின் செயற்கை நுண்ணறிவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள் - 2024

September 13 , 2024 18 days 53 0
  • டைம் இதழ் ஆனது, 'TIME100 இதழின் 2024 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள்' பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா போன்ற பல இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • அஷ்வினி வைஷ்ணவ், நந்தன் நீலகேனி மற்றும் நடிகர் அனில் கபூர் உள்ளிட்ட முக்கிய இந்தியப் பிரமுகர்களும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
  • 2023 ஆம் ஆண்டில், புது டெல்லி நீதிமன்றம் அனில் கபூரின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்துள்ளது.
  • பல்வேறு வணிக நோக்கங்களுக்காக என்று செயற்கை நுண்ணறிவினைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக ஆளுகை உரிமைகளை நன்கு பாதுகாப்பதை கபூர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்