TNPSC Thervupettagam

TM பசின் – வங்கி மோசடி வாரியம்

August 27 , 2019 1790 days 586 0
  • ரூ. 50 கோடிக்கும் மேலான வங்கி மோசடிகளை ஆய்வு செய்வதற்காகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரைப்பதற்காகவும் வங்கி மோசடிகளுக்கான ஆலோசனை வாரியத்தை (ABBF - Advisory Board for Banking Frauds) மத்திய கண்காணிப்பு ஆணையம் (CVC - Central Vigilance Commission) அமைத்துள்ளது.
  • நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்த வாரியமானது முன்னாள் கண்காணிப்பு ஆணையரான TM பசின் தலைமையில் செயல்படவிருக்கின்றது.
  • ரூ.50 கோடிக்கும் மேல் உள்ள அனைத்து வங்கி மோசடி வழக்குகளையும் வங்கிகள் ABBFற்குப் பரிந்துரைக்கும்.
  • இது மற்ற விசாரணை அமைப்புகள் விசாரிப்பதற்கு முன்பு அனைத்துப் பெரிய வங்கி மோசடி வழக்குகளை விசாரணை செய்யும் முதல்நிலை அமைப்பாக செயல்பட விருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்