TNPSC Thervupettagam
April 30 , 2022 814 days 1734 0
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் ஆனது ‘TNEB 2.0’ என்ற ஒரு திட்டத்தினைத் தொடங்க உள்ளது.
  • இது அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்து 2030 ஆம் ஆண்டிற்குள் மின் விநியோக முறையை நவீனமயமாக்குவதற்கான ஒரு திட்டமாகும்.
  • சிங்கார சென்னை 2.0 போலவே ‘TNEB 2.0’ திட்டமும் மாநிலத்தில் மின்சார உற்பத்தியை இரட்டிப்பாக்குவதையும், தடையில்லா விநியோகத்தை உறுதி செய்ய மின் விநியோக முறையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 'TNEB 2.0’ திட்டமானது, 33,877 மெகா வாட்டாக உள்ள மின் உற்பத்தியை 77,153 மெகா வாட்டாக இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
  • மாநிலத்தில் உள்ள அனல், நீர் மற்றும் எரிவாயு விசையாழி (சுழலி) மின் உற்பத்தி ஆலைகளின் மின் உற்பத்தித் திறனானது 7,175 மெகாவாட்டிலிருந்து 41,085 மெகா வாட்டாக உயர்த்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்