சுவாமி சித்பவானந்தா எழுதிய ‘பகவத் கீதை’ நூலின் கிண்டில் பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
சுவாமி சித்பவானந்தாஜி என்பவர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள திருப்பரைத்துரை என்ற இடத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா தபோவனம் ஆசிரமத்தை நிறுவியவர் ஆவார்.
ஈக்வடாரின் சங்காய் எரிமலையானது சமீபத்தில் வெடித்துச் சிதறியது.
பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்த பிரிக்ஸ் தொடர்பு குழுவின் தலைவர்கள் இந்தியாவின் தலைமையின் கீழ் தங்கள் முதல் சந்திப்பை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த ஆண்டிற்கான பிரிக்ஸின் கருத்துரு "BRICS@15: Intra BRICS Cooperation for Continuity, Consolidation, and Consensus" என்பதாகும்.
சாலைகளில் உள்ள அனைத்து மதக் கட்டுமானங்களையும் அகற்ற உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் அமைச்சரவையானது தனியார் துறையில் 75 சதவீத வேலைகளை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கும் ஒரு வேலைவாய்ப்புக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
ஜார்க்கண்டிற்கு முன்பு, ஹரியானா மாநில அரசாங்கமும் இதே போன்ற ஒரு கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருந்தது.