மாடர்னா நிறுவனமானது தனது கொரோனா தடுப்பூசியினை குழந்தைகள் மீதும் 6 மாதங்கள் மற்றும் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மீதும் செலுத்தி பரிசோதனையைத் தொடங்கியுள்ளது.
கிட்கோவ் (KidCOVE) ஆய்வு எனப்படும் இந்த மருத்துவச் சோதனையானது கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் தோராயமாக 6,750 குழந்தைகளிடம் மேற்கொள்ளப் பட உள்ளது.
இந்தியப் பாராளுமன்றம், தனது நட்பு நாடுகளுடன் இணைந்து ஒரு பாராளுமன்ற நட்புக் குழுவினை உருவாக்குவதற்கான முன்மொழிவு பற்றி விவாதித்து வருகிறது.
இது நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.
ஒலிநாடாப் பேழைகளைக் கண்டுபிடித்த டச்சு அறிவியலாளரான லூ ஓட்டென்ஸ் சமீபத்தில் இயற்கை எய்தினார்.
மேலும் அவர் காந்தநாடாப் பேழையினையும் கணினி குறுவட்டுகளையும் (magnetic tape players and the computer discs) உருவாக்கி உள்ளார்.
முரளி ஸ்ரீசங்கர் அவர்கள் நீளம் தாண்டுதல் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தேர்வாகியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி வரம்பு 8.22 மீட்டராகும். ஸ்ரீசங்கர் பெடரேஷன் கோப்பைப் போட்டிகளில் தனது இறுதி முயற்சியில் 8.26 மீட்டர் நீளம் தாண்டி தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.