சமூக நல வீட்டுவசதி கட்டிடக் கலைஞர்களான அனி லகடான் மற்றும் ஜீன் பிலிப்பே வசால் ஆகியோர் 2021 ஆம் ஆண்டிற்கான பிரைட்ஸ்கர் கட்டிடக்கலைப் பரிசின் வெற்றியாளர்களாக அறிவிக்கப் பட்டு உள்ளனர்.
இவர்கள் லகடான் & வசால் எனப்படும் ஒரு பிரான்சு நிறுவனத்தை நிறுவிய நபர்கள் ஆவர்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியப் பெண்களின் மன உளைச்சலைப் போக்கும் வகையில் அவர்களுக்கு உதவிட மத்திய அரசாங்கம் வெளிநாடுகளில் மகளிர் உதவி மையங்களை அமைக்க உள்ளது.
இந்த மையங்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு வருகின்றன.
கதகளி நடனக் கலைஞரான குரு செம்மஞ்சேரி குஞ்ஹி ராமன் நாயர் அவர்கள் தனது 105வது வயதில் இயற்கை எய்தினார்.
இவருக்கு 2017 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஒளிச்சேர்க்கை முறையைப் போன்றே செயல்படும் ஒரு செயற்கை முறையைக் கண்டறிந்துள்ளனர்.
இம்முறை சூரிய ஒளியைப் பயன்படுத்தி, உள்ளிழுக்கப்பட்ட கார்பன்டை ஆக்சைடை கார்பன் மோனாக்சைடாக மாற்றுகிறது.