மகாராஷ்டிராவிலுள்ள கௌதாலா ஆத்ரம்காட் வனவிலங்குச் சரணாலயத்தில் 1940 ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாக தற்போது தான் ஒரு புலியானது தென்பட்டு உள்ளது.
மறைமுகமான கருணைக் கொலையை அதிகாரப் பூர்வமாக்கும் ஒரு சட்டத்திற்கு ஸ்பெயின் நாட்டின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இத்துடன் நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் வரிசையில் மறைமுக கருணைக் கொலையை அதிகாரப் பூர்வமாக்கிய நான்காவது ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் மாறியுள்ளது.
டிஜிட்டல் க்ரீன் என்ற சான்றிதழானது ஐரோப்பிய ஆணையத்தின் ஒரு முன்மொழிவு ஆகும்.
பெருந்தொற்று காலங்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் பாதுகாப்புடன் கூடிய தடையற்ற சுதந்திரமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கமாகும்.
இராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெஹ்லாட் அவர்கள், “முக்கிய மந்திரி சிரஞ்சீவி யோஜனா” எனப்படும் பொது சுகாதாரத் திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், இராஜஸ்தானில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச சுகாதார சேவைகள் வழங்கப் படும்.
யுனெஸ்கோ அமைப்பானது யுஎஸ்ஓ இந்தியா மற்றும் டூன்ஸ் மீடியா குழுமத்துடன் சேர்ந்து மாணவர்களுக்கான நீர்ப் பாதுகாப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வுத் திட்டத்தில் இணைந்துள்ளது.
தான்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹு ஹசன் (Samia Suluhu Hassan) என்பவர் பதவியேற்றுள்ளார்.