தீவு நாடான தனது நாட்டில் பண வழங்கீட்டிற்காக இணைய சங்கேதப் பணத்தினை அங்கீகரித்து ஒழுங்குமுறைப் படுத்தப் போவதாக கியூப அரசு அறிவித்துள்ளது.
கியூப நாட்டில் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் இணைய சங்கேதப் பணம் பிரபலமடைந்ததாலும் அவர்கள் டாலர்களைப் பயன்படுத்துவது கடினமானதைத் தொடர்ந்தும் இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 ஆம் தேதியானது அமெரிக்க நாடாளுமன்றக் காங்கிரசினால் மகளிர் சமத்துவ தினமாக அறிவிக்கப் பட்டது.
இந்த தேதியானது பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான 1920 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் நினைவாக தேர்ந்தெடுக்கப் பட்டது.
இந்திய கிராண்ட் மாஸ்டர் S.P. சேதுராமன், பார்சிலோனா ஓபன் செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
அதில் இந்திய நாட்டைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி மூன்றாமிடத்தைப் பெற்று உள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஏற்கனவேயுள்ள (தமிழகம்) அவரது பணிகளோடுச் சேர்த்து பஞ்சாபின் ஆளுநராகவும் நியமித்துள்ளார்.
சண்டிகர் ஒன்றியப் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.