இம்பாலிலுள்ள ஜவஹர்லால் நேரு மணிப்பூர் நடன அகாடமி (JNMDA) மண்டபத்தில் நாத – சங்கீர்த்தன விழா தொடங்கியது.
இது மூன்று நாள் அளவிலான ஒரு இசை மற்றும் நடன விழாவாகும்.
தாலிபன்கள் 1964 ஆம் ஆண்டின் ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பிலிருந்து ஷரியா அல்லது இஸ்லாமியச் சட்டத்துடன் முரண்படாத சில விதிகளைத் தற்காலிக அடிப்படையில் சட்டமாக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த அரசியலமைப்பினை ஏற்பதனால் பெண்களுக்கு தற்சமயம் வாக்குரிமை வழங்கப் படும்.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று ஹவாய் நாட்டின் பெருந்தீவில் (Big Island) உள்ள கிலாவ்யா என்ற எரிமலை வெடித்தது.
புவியிலுள்ள அதிகம் செயல்பாட்டிலிருக்கும் எரிமலைகளுள் இதுவும் ஒன்றாகும்.
பூடான் நாட்டிற்காக ஒரு சிறிய செயற்கைக்கோளை உருவாக்குவதற்காக வேண்டி கூட்டு உற்பத்தி மீதான ஓர் அமலாக்க ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மற்றும் பூடான் நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஆகியவற்றிற்கு இடையே கையெழுத்தானது.
இந்தியாவில் 10 கோடி அளவிலான கோவிட்-19 தடுப்பூசிகளைச் செலுத்திய முதல் மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவெடுத்துள்ளது.