இந்திய அணியின் முன்னாள் மட்டைப்பந்து வீரரான ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் ரவி சாஸ்திரியை அடுத்து இந்தப் பதவியை ஏற்க உள்ளார்.
இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி வழங்கீடு குறித்த ஒரு கீதத்தினை (பாரத் கா திகாகரன்) மத்திய அரசு வெளியிட்டது.
இந்தப் பாடலை பிரபலப் பாடகர் பத்மஸ்ரீ கைலாஷ் கேர் பாடியுள்ளார்.
இந்திய இராணுவத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கோர்கா ரைபிள்ஸ் (எல்லைப் படை) படையின் 5வது படைப்பிரிவினைச் சேர்ந்த ஒரு அணியானது மதிப்பு மிக்க கேம்பிரிய ரோந்துப் பயிற்சியில் தங்கப் பதக்கம் வென்றது.
இது ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடத்தப் பட்டது.
சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவில் இஸ்ரேல் புதிய உறுப்பினராக இணைந்தது.
E.R. சேக் என்பவர் ஆயுதத் தளவாட இயக்குநரகத்தின் (ஒருங்கிணைப்பு மற்றும் பணிகள்) முதலாவது தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
இது ஆயுதத் தொழிற்சாலை வாரியத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.