குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே மனநலம் குறித்து ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் மனநலம் குறித்த தவறான கருத்துகளை உடைத்தெறிவதற்காக சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் யுனிசெஃப் ஆகியவை ஒன்றிணைந்துச் செயல்பட முடிவு செய்துள்ளள.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள 2021 ஆடவர் T20 உலகக் கோப்பைப் போட்டியை முன்னிட்டு இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
2வது கடற்படைத் தளபதிகள் மாநாடானது (2021) சமீபத்தில் புதுடெல்லியில் தொடங்கப் பட்டது.
இந்த மாநாடானது முக்கியச் செயல்பாடுகள், சாதனங்கள், தளவாடங்கள், மனித வள மேம்பாடு, பயிற்சி மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் போன்றவற்றை மதிப்பீடு செய்வதற்கானதாகும்.
R. பிரக்ஞானந்தா, அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் யூவ் என்பவரைத் தோற்கடித்து ஜுலியஸ் பேர் சேலஞ்சர்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
NATO அமைப்பிற்கான (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) தனது பணிகளை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது.
மத்திய வான்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய M. சிந்தியா 6 விமான வழித் தடங்களைக் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அந்த 6 விமான வழித் தடங்களாவன; கொல்கத்தா–கவுகாத்தி, கவுகாத்தி-ஐஸ்வால், ஐஸ்வால்-ஷில்லாங், ஷில்லாங்-ஐஸ்வால், ஐஸ்வால்-கவுகாத்தி மற்றும் கவுகாத்தி–கொல்கத்தா ஆகியன.
ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு நீர்மப் பெட்ரோலிய வாயுவினை (LPG) பரிமாற்றும் நடவடிக்கையானது முதன்முறையாக இந்தியக் கடற்கரைப் பகுதியில் கொல்கத்தாவில் பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தினால் மேற்கொள்ளப் பட்டது.
கொல்கத்தாவில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரிமாற்றமானது கணிசமான அளவில் அந்நிய செலாவணியைச் சேமிப்பதில் வர்த்தகத் துறைக்கும் நமது நாட்டிற்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.