நிதியியல் நடவடிக்கைப் பணிக்குழுவானது பாகிஸ்தான் நாட்டினை ‘சாம்பல் நிறப் பட்டியலில்’ தக்க வைத்துள்ளது.
இந்த முறை துருக்கி, ஜோர்டன் மற்றும் மாலி ஆகிய நாடுகளையும் தனது சாம்பல் நிறப் பட்டியலில் அந்த அமைப்பு சேர்த்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “Veer Savarkar : The man who could have prevented partition’s” என்ற புத்தகத்தினை வெளியிட்டார்.
இந்தப் புத்தகமானது உதய் மஹுர்கர் மற்றும் சிராயு பண்டிட் ஆகியோரால் எழுதப் பட்டது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பானது மாடர்னா மற்றும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனங்களின் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான கூடுதல் அல்லது ஊக்க மருந்துத் தவணைகளை அங்கீகரித்துள்ளது.
அமெரிக்கர்கள் தாங்கள் செலுத்திக் கொண்ட தடுப்பு மருந்திலிருந்து வேறுபட்ட ஒரு மருந்தினை ஊக்க மருந்துத் தவணையாக தேர்ந்தெடுக்கலாம் எனவும் அந்த அமைப்பு அறிவித்தது.