புகழ்பெற்ற எழுத்தாளர் மன்னு பண்டாரி தனது 90வது வயதில் காலமானார்.
இந்தி இலக்கியத்தினுடைய நயீ கஹானி இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் பண்டாரியும் ஒருவர் ஆவார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “துவாரே ரேஷன் திட்டத்தை” தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் 10 கோடி மக்களுக்கு அவர்கள் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.
சர்வதேச கிரிக்கெட் குழுவானது கிரிக்கெட் துறையின் ஜாம்பவான்களான மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை), ஷான் பொல்லாக் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் ஜேனட் பிரிட்டின் (இங்கிலாந்து) ஆகியோர் புகழ் அரங்கம் எனப்படும் Hall of fame பட்டியலில் சேர்க்கப் பட்டதாக அறிவித்தது.
2009 ஆம் ஆண்டில் புகழ் அரங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில் 106 வீரர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.