துபாயில் நடைபெறும் முதல் சர்வதேச ஆடை அலங்கார அணிவகுப்பிற்குக் கோவையைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ராணா சிவக்குமார் தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக ஆர்.எம்.கதிரேசன் அவர்களை ஒரு மூன்றாண்டுக் காலத்திற்கு நியமித்து ள்ளார்.
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் ஆளுநர் இருக்கிறார்.
வெனிசுலாவில் உள்ள 8,573 இசைக் கலைஞர்கள் சாய்கோவ்ஸ்கியின் "ஸ்லாவோனிக் மார்ச்" (Tchaikovsky's "Slavonic March") என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய ஒரு இசைக்குழுச் சாதனையை நிகழ்த்தினர்.
வெனிசுலாவின் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இசைக்குழுவின் தேசிய அமைப்பு "எல் சிஸ்டெமா" என்று அழைக்கப்படுகிறது.
11 பெண் இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு நிரந்தர ஆணையத்தினை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், இராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு என்று ஒரு நிரந்தர ஆணையம் நிர்ணயிப்பதை உறுதி செய்யுமாறு உச்சநீ திமன்றம் மத்திய அரசிற்கு உத்தரவிட்டது.
கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ என்ற புதினத்திற்கு ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது' வழங்கப்பட்டது.