வங்காளதேசத்தின் முதல் கோவிட்-19 தடுப்பு மருந்தான பங்காவாக்ஸ் என்ற மருந்து மனிதர்களுக்கு செலுத்தப்படுவதற்காக வேண்டி வங்காளதேச மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.
பங்காவாக்ஸ் இதற்கு முன்பாக பான்கோவிட் (Bancovid) என்று அழைக்கப்பட்டது.
கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மீதான 5வது கிழக்காசிய உச்சி மாநாடானது கொல்கத்தாவில் நடத்தப் பட்டது.
இந்தியா ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்தது.
இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் திரு. ரஞ்சன் மதுகல்லே 200 டெஸ்ட் போட்டிகளில் போட்டி நடத்துனராக இருந்த முதல் கிரிக்கெட் போட்டி நடத்துனர் என்ற ஒரு பெருமையைப் பெற்றுள்ளார்.
கல்லே என்னுமிடத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையே நடத்தப் பட்ட ஒரு டெஸ்ட் போட்டியின் போது இந்தச் சாதனையானது நிகழ்த்தப் பெற்றது.
வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்களின் 20வது சந்திப்பில் பங்கேற்ற இந்தியப் பிரதிநிதிகளுக்குத் தலைமை ஏற்று அவர்களை வழி நடத்தினார்.
இந்தச் சந்திப்பானது கசகஸ்தான் நாட்டின் தலைமையில் நூர்-சுல்தான் என்னும இடத்தில் காணொலி வாயிலாக நடத்தப் பட்டது.