இந்தியக் கடற்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக வேண்டி பிரத்தியேகமாக நடத்தப் பட்ட முதலாவது கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றன.
இந்த மாநாட்டின்போது இந்தியப் பெருங்கடலில் இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னணி கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே பயிற்சிகள் நடத்தப்பட்டன.
கம்பிவடப் போக்குவரத்தினை (ropeway service) ஒரு பொதுப் போக்குவரத்து சேவையாக தொடங்க உள்ள முதல் இந்திய நகரம் வாரணாசி ஆகும்.
திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கம்பிவடப் போக்குவரத்து வசதியானது காண்ட் ரயில்வே நிலையம் (வாரணாசி சந்திப்பு) முதல் தேவாலய சதுக்கம் (கொடௌலியா) வரை அமைக்கப்பட உள்ளது.