தேசிய மாணவர் படையானது “புனீத் சாகர் அபியான்” என்ற ஒரு திட்டத்தின் கீழ், கடற்கரைகளிலிருந்து நெகிழி மற்றும் இதரக் கழிவுகளை அகற்றுவதற்காக தேசிய அளவிலான ஒரு பிரச்சாரத்தை நடத்துகிறது.
உள்ளூர் மக்கள் மற்றும் வருங்காலச் சந்ததியினரிடையே தூய்மையான கடற்கரையின் முக்கியத்துவம் குறித்த செய்தியைப் பரப்புவதே இந்த ஒரு மாத கால அளவிலான பிரச்சாரத்தின் ஒரு நோக்கமாகும்.
கட்டிபள்ளி சிவ்பால் என்பவர் ஓட்டுநர் உரிமம் பெற்ற இந்தியாவின் முதல் குள்ள மனிதர் ஆவார்.
இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சீனா தனது பல பில்லியன் டாலர் மதிப்பிலான மண்டலம மற்றும் சாலை என்ற முன்னெடுப்புத் திட்டத்தின், முதலாவது எல்லைக்கு அப்பாற்பட்ட இரயிலை லாவோஸ் நாட்டிலிருந்து இயக்கத் தொடங்கியது.
லாவோஸ், தென்கிழக்கு ஆசியாவின் நிலத்தினால் சூழப்பட்ட ஒரே நாடு ஆகும்.
தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் ஒன்றிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கோனிஜெட்டி ரோசைய்யா ஹைதராபாத்தில் காலமானார்.
88 வயதான ரோசய்யா, காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராவார்.
2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 9 அணு உலைகள் அமைக்கப்படும்.
வடக்கு இந்தியாவின் முதல் திட்டமான இந்தப் புதிய அணு உலையானது டெல்லியிலிருந்து 150 கி.மீ. தொலைவில் ஹரியானாவின் கோரக்பூரில் அமைக்கப் பட உள்ளது.