இந்தியாவில் குறைகடத்திகள் மற்றும் காட்சித் திரை ஆகியவற்றின் உற்பத்தியை (semiconductor and display manufacturing) அதிகரிப்பதற்காக 76,000 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை என்ற ஒரு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்துடன், மின்னணுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையானது ரூ.2.30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மாவோயிஸ்ட் போன்ற அமைப்புகளால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களிலுள்ள இளைஞர்களின் ஆர்வத்தினைப் பயன்படுத்துவதற்கான விளையாட்டுத் துறை சார்ந்த நடவடிக்கைகள் (SAHAY - Sports Action toward Harnessing Aspiration of Youth) என்ற ஒரு திட்டத்தினை ஜார்க்கண்ட் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டமானது திறமையுள்ள இளம் விளையாட்டு வீரர்களை மேன்மையடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி விருது விழாவில் இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அவனி லேக்ரா “சிறந்த அறிமுக வீராங்கனை” என்ற விருதைப் பெற்றார்.
டோக்கியோ போட்டிகளில் தங்கப் பத்தகத்தை வென்ற அவரது சாதனைக்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனமானது உன்ஷோ கிம் என்பவரை தனது புதிய நிர்வாக இயக்குநராக நியமித்தது.
சியோன் சியோப் கிம் என்பவரிடமிருந்து இவர் பொறுப்புகளை ஏற்க உள்ளார்.