இந்திய ரிசர்வ் வங்கியானது பட்டியலிடப்பட்டப் பணவழங்கீட்டு வங்கிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட சிறு நிதியியல் வங்கிகளை அரசு முகமை வணிகத்தை மேற் கொள்வதற்குத் தகுதியுள்ளனவாக அறிவிக்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவானது நிதி அமைச்சகத்தின் நிதியியல் துறையுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப் பட்டது.
இந்தியாவின் முதல் சர்வதேச நடுவண் மற்றும் இடையீட்டு மையம் ஹைதராபாத் நகரில் திறக்கப்பட்டது.
இதனை இந்தியத் தலைமை நீதிபதி N.V. ரமணா மற்றும் தெலங்கானா முதல்வர் K. சந்திரசேகர் ராவ் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.