காவல்துறையில் திருநங்கைச் சமுதாயத்திற்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
காவல் துறையின் அனைத்து நிலைகளிலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் படும்.
பிலடெல்பியாவில் நடைபெற்ற மதிப்புமிக்க ஜூனியர் US ஓபன் ஸ்குவாஷ் என்ற போட்டியின் 15 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்திய இளம்சிறுமி அனாஹத் சிங் என்பவர் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
13 வயது சிறுமியான இவர் டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார்.