HDFC வங்கியானது இந்தியத் தபால் பணவழங்கீட்டு வங்கி உடன் கைகோர்த்துள்ளது.
இது பகுதியளவு நகர்ப்புறமாக விளங்கும் பகுதிகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் வங்கிக் கணக்கு இல்லாத மற்றும் சேவைப் பெறாத சமூகப் பிரிவுகளுக்கு அதன் வங்கிச் சேவைகளை வழங்குவதற்கானதாகும்.
சாலையிலும் இரயில்பாதையிலும் இயங்கும் வகையிலான உலகின் முதல் இரட்டை வகைப் போக்குவரத்து வாகனமானது, ஜப்பானின் டோக்கூஷிமா மாகாணத்தில் உள்ள காய்யோ நகரில் அதன் பொது உபயோகத்திற்கு வேண்டி அறிமுகப்படுத்தப் பட்டது.
அதன் சாலை மற்றும் இரயில்பாதை இயக்கத்தை 15 வினாடிகளில் மாற்ற இயலும்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, உத்தரப் பிரதேசத்தில் காஸியாபாத்தின் டாஸ்னா எனுமிடத்தில் அமைந்த கிழக்கத்தியப் புறநகர் விரைவுப் பாதையில் முதலாவது நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பினை அறிமுகப்படுத்தினார்.
போக்குவரத்தில் எதிர்கொள்ளும் துயரங்களைக் குறைப்பதற்கும் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்குமான ஒரு முயற்சியாக இது தொடங்கப் பட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது பென் சுலயம் என்பவர் ஜீன் டாட் என்பவருக்கு அடுத்து சர்வதேச வாகனத் தொழில்துறைக் கூட்டமைப்பின் (FIA) முதல் ஐரோப்பிய தேசம் சாராத தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்வதேச வாகனத் தொழில்துறை கூட்டமைப்பானது ஃபார்முலா ஒன், உலக ராலி சாம்பியன்ஷிப், வேர்ல்டு என்டியூரன்ஸ், மற்றும் ஃபார்முலா E போன்ற கார் பந்தயங்களின் மீதான ஒரு ஆளுகைக் குழுவாகும்.
டிக்டாக் ஊடகமானது 2021 ஆண்டின் மிகப் பிரபலமான வலைத்தளமாக உருவெடுத்து மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளை விஞ்சியது.
இது க்ளவுட்ஃப்ளேர் எனும் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிறுவனம் வழங்கிய ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் அறிஞா்கள் சிலம்பொலி சு.செல்லப்பன், முனைவா் தொ.பரமசிவன், புலவா் இளங்குமரனாா், முருகேச பாகவதா், சங்கரவள்ளி நாயகம், செ.ராசு ஆகியோரின் நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளுக்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1.20 லட்சமாக உயா்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.